[1]செம்பியன் செல்வன்[வரலாற்றுக் கவிதை நாடகம்]


முன்னுரை:

           செம்பியன் செல்வன்[வரலாற்றுக் கவிதை நாடகம்].             கவிஞர் வ.த.இராமசுப்பிரமணியம்,எம்.ஏ அவர்களால்            எலுதப்பட்டது.184 பக்கங்களில் முல்லை நிலையம் எனும்            பதிப்பகம் வெலியிட்டது


நாடக மாந்தர்கலள்:

edit

            

கோப்பெருஞ்சோழன் :சோழ அரசன். உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தவன். இவனே செம்பியன் செல்வன்.

பெருஞ்சென்னி: கோப்பெருஞ்சோழனின் முதல் மகன்

இளஞ்சென்னி: கோப்பெருஞ்சோழனின் இரண்டாவது மகன்

புலவர் பொத்தியார்

புலவர் புல்லாற்றூர் எயிற்றியனார்

புலவர் கண்ணகனார் புலவர் கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார் புலவர் நத்தத்தனார்

புலவர் பிசிராந்தையார் : கோப்பெருஞ்சோழனுடைய நண்பர்கள்

உறையூர் கிழார் சோழநாட்டு அமைச்சர்

வேங்கை நாயகன் : சோழநாட்டுத் தளபதி

தமிழ்வாணன் சோழநாட்டுச் சான்றோர்

கொங்குவேள் : கருவூரைத் தலைநகராகக்கொண்டு ஆட்சி புரிந்த குறுநிலமன்னன்

தேன்மொழி : கொங்குவேளின் மகள்

கனிவண்ணனார் : கொங்குவேளின் அமைச்சர் பெருங்கோவன் : கொங்குநாட்டுத் தளபதி

முல்லை : தேன்மொழியின் தோழி

அறிவுடைநம்பி : பாண்டியநாட்டு வேந்தன்

பெருங்கிழார் : பாண்டியநாட்டு அமைச்சர்

கொற்கைவாணன் : பாண்டியநாட்டுத் தளபதி

கயல்விழி : பாண்டியனின் மகள்

மற்றும், ஊர்ப் பெருந்தலைவர்கள், வீரர்கள், வாயிற்காவலர்கள், ஒற்றர்கள், தூதுவர்கள், பாணர்கள், சான்றோர்கள், மக்கள், புலவர்கள், தோழியர் முதலானோர்


கதைச் சுருக்கம்:

edit
             உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிபவன் கோப்பெருஞ்சோழன். இவன் வீரமும், தமிழ் உணர்வும், கவிதை பாடும் ஆற்றலும், நீதிநெறியை நன்கு காக்கும் சீலமும் உடையவன்; சேர மன்னனை வெற்றி கொண்டு திகழ்ந்தவன். இவனுக்குக் கீழே குறுநில மன்னர்கள் பலர் சிற்றரசர்களாக ஆட்சிபுரிந்து வந்தார்கள். இவனுக்குப் பெருஞ்சென்னி இளஞ்சென்னி ஆகிய இரு மைந்தர்கள் இருந்தனர். இவனுடைய நண்பர்களாய்ப் புல்லாற்றூர் எயிற்றியனார், கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார், நத்தத்தனார், பொத்தியார், பிசிராந்தையார், கண்ணகனார் முதலானோர் விளங்கினார்கள். தமிழ் வாணன் என்னும் தமிழ்ச்சாது அரசாங்கத்தில் செல் வாக்குப்பெற்றவராகிப் பலதுறைகளில் நலம் புரிந்து விளங்கியவர்.

குறுநில மன்னனான கொங்குவேள் கருவூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தான். இவன் கோப்பெருஞ்சோழனுக்குக் கீழ்ப்பட்ட சிற்றரசனாகிக் கப்பம் செலுத்தி வருபவன். இவன் கோப்பெருஞ் சோழனை வசைமொழி கூறிச் செலுத்த வேண்டிய கப்பத் தொகையையும் செலுத்தாது விடுகிறான். இவனுடைய ஒரே மகள், தேன்மொழி. கொங்குவேள் கப்பம் செலுத்தவில்லை என்றாலும் அதனைப் பெரிய குற்றமாகக் கருதாது சோழமன்னன் தமிழ்ச்சாதுவாகிய தமிழ்வாண னைத் தூது அனுப்புகிறான்.

கொங்குவேள் தமிழ்வாணனைப் பார்க்கவும் மறுத்துச் சிறையில் அடைக்கிறான். ஆயினும் தன்மகள்தேன்மொழியைக் கொண்டு பணிவிடை செய்ய ஏற்பாடு செய்கிறான். தன்னுடைய தளபதியான பெருங்கோவனைப் பாண்டியநாட்டுக்குத் தூது அனுப்பிச் சோழ மன்னனைப் படை கொண்டு எதிர்க்குமாறு செய்தி விடுக்கிறான்.

பாண்டிய நாட்டு வேந்தனான அறிவுடைநம்பி சோழநாட்டுப் பெருந்தகையான தமிழ்வாணனைச் சிறைப்படுத்திய செய்தியை ஒற்றர் வாயிலாக அறிந்து தூதுவந்த பெருங்கோவனிடம் தமிழ்வாணனை விடுதலை செய்யும்படி ஆணையிடுகிறான்.

கொங்குவேளால் தமிழ்வாணன் சிறைப்பட்டதை யறிந்த கோப்பெருஞ்சோழன் தம் புதல்வர்களான பெருஞ்சென்னி, இளஞ்சென்னி ஆகியவர்களுடன் படைகளை அனுப்பித் தமிழ்வாணனை விடுதலை செய்து கொங்குவேளைச் சிறைப்படுத்தித் தன்முன்னே கொண்டு வருமாறு ஆணையிடுகிறான். படைகளுடன் சென்ற பெருஞ்சென்னி படைகள் இல்லாத கொங்குவேளைக் கைது செய்து காவலில் வைத்துத் தமிழ்வாணனை விடுதலை செய்கிறான்.

தமிழ்வாணன் தேன்மொழிக்குத் தமிழ் சொல்லித் தந்த ஆசானாகிய நிலையில் அவள் சோழர்களின் பெரு மையை உணர்கிறாள். பெருஞ்சென்னியும் தேன்மொழியும் ஒருவரையொருவர் காதல் கொள்கின்றார்கள். தேன்மொழி, தன் தந்தை சிறையில் வாட, தான் மகிழ்ந்து விளங்குவது எங்ஙனம் கூடும்? என வினவ, பெருஞ்சென்னி, கொங்கு வேளை விடுதலை செய்து மீண்டும் அந்நிலத்தின் சிற்றர சனாக இருக்கச் செய்கிறான். இச்செயல், தன் ஆணையை மீறுவதாகும் எனக் கோப்பெருஞ்சோழன், கருதித் தன் புதல்வர்களைப் பகைமையுடையவர்களாகக் காண்கிறான். இந்நிலையில் மதுரையம்பதியில் தமிழ் விழா நடைபெறுகிறது. கொங்குவேள் மற்றும் சோழ அரச குமாரர்கள் அவ்விழாவைக் காணச் செல்கின்றார்கள். அந்நிகழ்ச்சி பாண்டியன் அறிவுடை நம்பியின் திருமக ளான கயல்விழியும் கோப்பெருஞ்சோழனின் மைந்தனான இளஞ்சென்னியும் ஒருவரையொருவர் காதல் கொள்வதற்கு வாய்ப்பாக அமைந்தது. இதன்படி பெருஞ்சென்னி தேன்மொழியையும், இளஞ்சென்னி கயல்விழியையும் திருமணம் கொண்டு மகிழத் தமிழ்ச்சான்றோர் நெஞ்சங்கள் விழைந்தன. இச்செய்தியைக் கோப்பெருஞ் சோழனுக்குத் தெரிவிக்கும் நிலையில் தன் ஆணையை மதியாத சோழ அரச குமாரர்களைச் சிறைப்படுத்தி அழைத்துவருமாறு சோழன் ஆணையிடுகிறான். பெருஞ் சென்னியும் இளஞ்சென்னியும் கொங்குவேளை அழைத்துக் கொண்டு உறையூர் திரும்புகின்றனர். தமிழ் விழாவில் பங்கேற்ற சோழ அரசகுமாரர்களைப் பாராட்டும் வகையில் பாண்டியன் ஏராளமான தேர்களையும், குதிரை களையும், யானைகளையும் பரிசுப்பொருளாக உடன் அனுப்புகிறான்.

இதனையறிந்த கோப்பெருஞ்சோழன் தன் புதல்வர் கள் மீது போர் தொடுக்க ஆயத்தமாகிறான். அத்தருணத் தில் புல்லாற்றூர் எயிற்றியனார் என்னும் புலவர் தக்க அறிவுரை சாற்றுகின்றார். அவ்வுரையைக் கேட்டு மனம் மாறிய கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் துறக்க முடிவு செய்கிறான். அப்போது சென்னியரும் கொங்கு வேளும் மன்னன் முன்வந்து பணிகின்றனர்.

கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் துறக்கும்போது பிசிராந்தையார், கருவூர்ப்பெருஞ் சதுக்கத்துப் பூதநாதனார், கண்ணகனார், நத்தத்தனார்,புல்லாற்றூர் எயிற்றியனார் முதலான சங்கப் புலவர்களும் உடன் இருந்து உயிர் துறக்க மேவினார்கள்.

புலவர் பொத்தியார் அப்போது மகப்பேறு அமையாத நிலையில் பின்னர் வருமாறு கோப்பெருஞ் சோழன் பணிக்க, அவர், மகப்பேறு பெற்ற பின்னர் அச்சோழனின் நடுகல் பக்கத்தில் இருந்து உயிர் துறந்தார். இவ்வரலாற்றைப் புறநானூற்றுப் பாடல்கள் எண். 191, 212, 213, 214, 215, 216, 217, 218, 219, 222, 223 ஆகியவற்றால் அறியலாம்.

  1. ^ செம்பியன் செல்வன்[வரலாற்றுக் கவிதை நாடகம்]